Saturday 2 May 2009

கடைகளைப் பூட்டினால் கொலைகள் தொடரும்!! இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை!!

மட்டக்களப்பில் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட 8 வயதான சதீஸ்குமார் தினுஷிகாவின் கொலையைக் கண்டித்து மட்டக்களப்பு மக்கள் மூன்றுநாளைக்கு ஹர்த்தாலொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இன்றுமுதல் மூன்று நாளைக்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முடிவாகியிருந்தவேளை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் மிரட்டப்பட் டுள்ளதாக வர்த்தகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். மாலை 6 மணியளவில் மட்டக்களப்பை கதிகலக்கிவரும் மோட்டார் சைக்கிள் குறூப் பான அப்பாச்சி குறூப் ரோந்து வந்ததாகவும் இவர்களுடன் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் முகாமிலிருந்து பள்சர் மோட்டார் சைக்கி ளொன்றில் வந்த இருவர் கடைகளுக்குள்ளிருந்த சில வர்த்தகர்களை வெளியே அழைத்து யாராவது கடைகளை மூடினால் இந்தச் சிறுமிக்கு நடந்ததைப்போன்று தொடர்ந்து நடக்கும் என தமிழில் எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் சிறுமி தினுஷிகாவின் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கும் முக்கிய கொலையாளியான புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ரதீஸ்குமார் என அடையாளம் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இவர்கள் முற்றாக மூடிமறைக்கப் பட்ட தலைக்கவசம் அணிந்து வந்ததாகவும் இவர்களின் நடவடிக்கைகளை வைத்து ஒருவர் ரதீஸ்குமாராக இருக்கலாம் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: