Saturday, 15 November 2008

மீனகம் அலுவலகம் கருணாகுழுவினரால் கைப்பற்றப்பட்டது..!!

முன்னர் பிள்ளையான் குழுவினரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாகவும் முக்கிய அலுவலகமாகவும் மீனகம் இருந்து வந்தது. ரி.ஏம்.வி.பி.ஆரம்பித்த காலங்களில் மட்டக்களப்பிலும் பிற மாவட்டங்களிலும் கடத்தப்படுகின்ற இளைஞர்களும் வர்த்தகர்களும் இந்த முகாமினுள்ளே கொண்டுவரப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டனர். பின்னர் பொது மக்களைச் சந்திக்கும் ஒரு அலுவலமாக இதனை மாற்றினர். தற்பொழுது வரை இந்த மீனகம் அலுவலகம் ரி.ஏம்.வி.பி யின் ஊடகங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான ஒரு நிலையமாக செயற்பட்டு வந்ததுடன் பிள்ளையானின் நேரடி கண்காணிப்பில் இருந்து வந்துள்ளது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு அலுவலகங்களையும் பிள்ளையானின் கைகளில் இருப்பதால் ஆத்திரமடைந்த கருணாகுழுவினர் மீனகத்தை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவெடுத்தனர். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது அங்கு ரி.எம்.வி.பியின் உத்தியோககபூர்வ பத்திரிகையான தமிழ்அலை பத்திரிகை இயங்கி வந்ததுடன் அண்மைக்காலமாக இது பிள்ளையானின் ஊதுகுழலாகவும் மாறிவிட்டிருந்தது. எனவே இந்த பத்திரிகை அலவலகத்தை கைப்பற்றுவதன் மூலம் கருணாவின் ஊதுகுழலாக இதனை மாற்றி மக்கள் மத்தியில் கருணாவுக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதும் ஒரு காரணம்.

இவற்றை கருத்திற்கொண்டே இந்த அலுவலகத்தினுள்ளே நேற்று முன்தினம் திடீரென கருணா குழுவினர் உட்புகுந்து அங்கிருந்த பிள்ளையான்குழு உறுப்பினர்களை நையப்புடைத்ததுடன் அலுவலகத்தை கைப்பற்றி தமது கட்டுப்பர்டில் கொண்டுவந்ததுடன் பத்திரிகை அச்சகத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

No comments: