Friday 15 May 2009

மிகப்பயங்கரமான இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்!! அதிர்ச்சிதரும் புகைப்படம்!!

கடந்த 48 மணிநேரத்துக்கும் மேலாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலுள்ள மக்கள் மீது படையினர் நடத்தி வருகின்ற மிக மோசமான பொஸ்பரஸ் எரிகுண்டு தாக்குதலில் 4000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாவும் வவுனியாவிலிருந்து எமக்குக் கிடைத்த தகவலொன்று தெரிவிக்கின்றது. இந்நிலையில் இதுவரைக்கும் வான்மூலமாக நடத்தப்பட்டு வந்த இந்த பொஸ்பரஸ் எரிகுண்டுத் தாக்குதல் தற்பொழுது எறிகணைகள் மூலமாகவும் ஏவப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு பகுதியில் பட்டாலும் உடனடியாக அதை எரித்து கருக வைக்கும் தன்மையுடைய இவ் இரசாயன குண்டு உலக நாடுகளில் தடை செய்யப்பட்டாலும். உலகை தனது பொய்பிரசாரங்களால் ஏமாற்றி இரசா யன வெடிமருந்துகளை தாம் பாவிப்பதில்லையென இலங்கை அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் வன்னியில் பொதுமக்கள் மீது இரசாயனக் குண்டுகள் பாவிக்கப்படுகின்றமைக்கான ஆதாரம் ஒன்று எமது கைக்குக்கிடைத்துள்ளது. வன்னிக் களமுனையிலுள்ள இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மூலமாக கிடைக்கப் பெற்ற இப்புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்.

No comments: