
போலிஸாரின் நீல நிற ஜீப்பொன்றில் சிவிலுடையில் வந்த சிலர் தாம் பொலிஸ் எனக்கூறியே இவ்விளைஞர்களைக் கொண்டுசென்றதாகவும். நேட்கபே நடத்து னர்கள் சிலரும் இவர்களால் தாக்கப்பட்டதாகவும் நெட்கபே நடத்துனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் கொண்டுசெல்லப்பட்ட 12 இளைஞர்களும் மட்டக் களப்பு பொலிஸ் நிலையத்திலோ அல்லது மட்டக்களப்பு சிறைச்சாலையிலோ இதுவரை கொண்டுவரப்படவில்லையென பொலிஸ்நிலைய வட்டாரங்களை மேற்கோள் காட்டிய தகவலொன்று தெரிவிக்கின்றது.
இதனால் மட்டக்களப்பு மக்கள் பீதியும் கலக்கமும் அடைந்துள்ளனர். இதற்கும் மேலாக மட்டக்களப்பிலிருந்து வெளிச்செல்லுகின்ற அனைத்து கம்பிவழி தொலைபேசிகளும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் ஒட்டுக்கேட்கப்படுவ தாக தகவலொன்று தெரிவிக்கின்றது. அத்துடன் மாலை 7 மணிக்குபின் இளைஞர் கள் வீதிகளில் திரிந்தால் சுட்டுக்கொல்லப்படுவார்களென கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எடிசன் குணதிலக உத்தரவிட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
1 comment:
hello... hapi blogging... have a nice day! just visiting here....
Post a Comment