Saturday 21 March 2009

உன்னிச்சை படைமுகாம் பகுதியில் பணத்துடன் குடும்பஸ்தர் கடத்தல்.

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பிரதேசத்தில் பாவற்கொடிசேனை என்கின்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 40வயது தவராஜா என்பவர் தனது கால்நடை(மாடு) ஒன்றை விற்பனை செய்து விட்டு ஒரு இலட்சம் ரூபாய் பணத்துடனும் தனது குழந்தைகளுக்காக பழவகைள் மற்றும் உணவுப்பொருட்களுடனும் நேற்று (20-03-2009) வெள்ளிக்கிழமை தனது வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் உன்னிச்சைப் பகுதியிலுள்ள 6ம் கட்டையில் அமைந்துள்ள படையினரின் முகாம் பகுதியில் வைத்து அவர் காணாமல் போயுள்ளார்.
அவ்முகாமில் அவரை சோதனைக்காக வழிமறித்து படையினர் சோதனையிடுவதனை அப்பகுதி மக்கள் கண்டுள்ளார்கள். இவர் வீடு திரும்பாத நிலையில் குறித்த படைமுகாமில் சென்று விசாரித்தபோது அவ்வாறான ஒருவரை தாங்கள் கைது செய்யவில்லை என்று சிறிலங்கா படையினர் தெரிவித்துள்ளனர். அவர் பணம் வைத்திருந்த காரணத்தினால் அந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் அவரை சோதனைக்காக வழிமறித்த சிங்கள படையினர் கைது செய்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது நிலவுகின்றது. கடந்த சிலநாட்களுக்கு முன்னரும் களுவாஞ்சிக்குடியில் விசேட அதிரடிப்படை முகாமுக்குச் சென்ற நகைத்தொழிலாளி ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்துடன் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

No comments: