
இதில் கீர்த்தி என்பவரின் மனைவியான 45 வயதுடைய கனகரட்ணம் மகேஸ்வரி 17 ஆம்திகதி வெள்ளிக்கிழமை வீட்டில் வைத்துக் கடத்தப் பட்டுள்ளார். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள இவரது வீட்டுக்கு சிறிது தூரத்தில் வானை நிறுத்திவிட்டு சிவிலுடையில் வந்த சிலர் தாங்கள் சிஐடி எனக்கூறி இவரை அழைத்துச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த வருடம் இதேமாதத்தில் இப்பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்க போராளியான இவரது மூத்தமகன் காட்டிக் கொடுக்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இன்று பெற்றோர்களும் கடத்தப்பட்டுள்ள நிலையில் சித்தசுவாதீனமற்ற இவர்களது இரண்டாவது மகனும், தனியார் பயிற்சி நிலையமொன்றில் தொழில்புரிந்து வருகின்ற மகளும் அநாதரவான நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment