Sunday 12 April 2009

மட்டக்களப்பில் புலனாய்வுப் பிரிவினரால் இளைஞர் கைது!!

மட்டக்களப்பு நகரத்தில் இன்று மாலை 07.30 மணி யளவில் இளைஞரொருவர் இராணுவப் புலனா ய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வாகன மொன்றில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மட்டக் களப்பு நகரப் பகுதியில் வைத்து இன்று மாலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய் யப்பட்ட இந்த இளைஞர் புலனாய்வுப் பிரிவினரால் பயன்படுத்தப்படும் NC LF 4961 இலக்கமுடைய வெள்ளைநிற ரிப்பர்வாகனத்தில் கண்களும் கைகளும் கறுப்புத் துணியொன்றினால் கட்டப்பட்டு உட்கார வைக்கப் பட்டிருந்ததுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இருவர் சிவிலுடையில் ஆயுதங்களுடன் அருகருகே அமர்ந்திருக்க கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு கடத்தப்பட்ட இளைஞர் பிங் நிற சேர்ட் அணிந்திருந்தவரென்றும். மாநிறமுடைய மெலிந்த தேகத்தை யுடையவரென் றும் நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் கைது செய்யப்பட்டு கடத்திச் செல்லப்பட்டவர் தொடர்பான விபரங்களைப் பெற நாம் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. மட்டக்களப்பு புதுப்பாலத்தினூடாக இவர் லேக் வீதியிலுள்ள விசேட அதிரடிப்படையினரின் சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதை நேரில் பார்த்த மக்கள் உறுதிசெய்துள்ளனர்.

No comments: